இது குறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுவாங், ' வைரஸ் என்பது மனித குலத்திற்கு பொதுவானது. இது உலகின் எந்த மூலையில் எப்போதும் உருவாகலாம். சீனாவும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சீனா குற்றவாளி அல்ல. கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து, அதன் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான விஷயங்களை உலக நாடுகளிடம் பகிர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த எங்களுக்கும் கடமை உள்ளது. எங்கள் முயற்சியை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்